அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டூழியம்


 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டூழியம்

The atrocities of American imperialism

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் அரசியல் பேச்சு என புறக்கணிக்கப்பட்ட இது, தற்போது ஐரோப்பியத் தலைவர்களால் தீவிரமான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா - அமெரிக்கா இடையிலான உறவுகளில் பெரும் நெருக்கடியை இது ஏற்படுத்தலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

கிரீன்லாந்து டென்மார்க் அரசின் கீழ் உள்ள ஒரு சுயாட்சிப் பிரதேசம். வேறு நாட்டின் ஆதிக்கம் வேண்டாம் என்பதை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் மக்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா இந்த தீவை தன்னுடன் இணைக்க முயன்றால், விருப்பமில்லாத கிரீன்லாந்து மக்களை இராணுவ பலத்தால் கட்டுப்படுத்த நேரிடும். இது நீண்டகால அடிமை ஆட்சியையும், சர்வாதிகாரத்தை சூழலையும் உருவாக்கும்.

இந்த யோசனைக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் கடும் கண்டனம் தெரிவித்தார். வாஷிங்டனுக்கு நேரடி எச்சரிக்கையாக, "அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்றும் தேவை பற்றிப் பேசுவது முற்றிலும் அர்த்தமற்றது" என்றார். டென்மார்க் ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் இணைக்க அமெரிக்காவிற்கு சட்ட அடிப்படை இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், டென்மார்க்கும் கிரீன்லாந்தும் நேட்டோ உறுப்பினர்கள் என்பதால், கூட்டுப் பாதுகாப்பு உத்தரவாதத்தால் ஏற்கனவே பாதுகாக்கப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேட்டோ நாடு

ஏற்கனவே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிற்கு கிரீன்லாந்தில் விரிவான ராணுவ அணுகல் உண்டு என டென்மார்க் குறிப்பிட்டது. கிரீன்லாந்து படையெடுக்கப்பட்டால், டென்மார்க் நேட்டோவின் ஐந்தாம் பிரிவை (Article 5) பயன்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டியிருப்பது, நிலையை மேலும் தீவிரப்படுத்துகிறது. இப்பிரிவின்படி, ஒரு நேட்டோ உறுப்பினர் மீதான தாக்குதல், அனைத்து உறுப்பினர்கள் மீதும் நிகழும் தாக்குதலாகவே கருதப்படும்.

கூட்டணியை ஆதரிப்பதா இல்லையா என்பதை ஒவ்வொரு நேட்டோ நாடும் பகிரங்கமாகத் தேர்வு செய்ய இது கட்டாயமாக்கும். ஐந்தாம் பிரிவுக்கு ஆதரவளிக்கத் தவறினால், நேட்டோ அமைப்பே சிதையலாம். அதாவது ஒரு நேட்டோவை தாக்கினால் மற்ற எல்லா நேட்டோ நாடும் உதவிக்கு வரும். ஆனால் தாக்குதல் நடத்துவதே நேட்டோ நாடு என்றால் என்ன ஆகும்? மொத்தமாக நேட்டோ அமைப்பே சிதைந்து போகும்.

இந்த விவகாரத்தின் விளைவுகள் மோசமானதாக கடுமையானதாக இருக்கும். கிரீன்லாந்தை இணைப்பது நேட்டோ ஒற்றுமையைச் சிதைக்கும். இதன் மூலம் ரஷ்யா பால்டிக் நாடுகளை அச்சுறுத்தி நேட்டோவிற்கு சவால் விடும். நேட்டோ உடைந்தால்.. நேட்டோவில் இருக்கும் நாடுகளை தாக்க ரஷ்யா அஞ்சாது.

ரஷ்யா நேட்டோ

அத்துடன், அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே பெரிய வர்த்தகப் போரையும் தொடங்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கப் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து பதிலடி கொடுக்கலாம். இது அமெரிக்க வணிக நலன்களையும் முதலீட்டாளர்களையும் பாதிக்கும்.

அமெரிக்காவிற்குள், இந்த நடவடிக்கை கடுமையான அரசியல் எதிர்ப்பை ஏற்படுத்தும். இத்தகைய செயலின் செலவு, அபாயங்கள், அவசியத்தை மக்கள் கேள்வி எழுப்பலாம். இது அமெரிக்காவில் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தல்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது. ராணுவ மோதல், பொருளாதார சேதம், உள்நாட்டு பாதுகாப்பு தன்மை என பலவற்றில் பிரச்சனைகளையை ஏற்படுத்தும்.

நேட்டோ உடைந்தால். அது சீனா, ரஷ்யாவிற்கு சாதகமாக மாறும். கிரீன்லாந்தை கைப்பற்றி அமெரிக்கா தற்காலிகம. நீண்ட கால கண்ணோட்டத்தில் அமெரிக்காவிற்கு அது பெரிய பின்னடைவாக அமரும்.

5 கருத்துகள்: